Saturday, March 23, 2013

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி பாடம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு, போட்டி தேர்வு அடிப்படையில் நிரப்புவது வழக்கம். இதில் கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளியில் பகுதி நேர கணினி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாம். அரசு பணியே கிடைக்காதவர்கள் கூட தம் வீட்டு முகவரியை கொண்டு துறை தேர்வுகளை எழுதலாம். 


               பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் அல்லது தொடக்க கல்வி துறை எனில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அனுமதியுடன் துறை தேர்வுகளை எழுதலாம். பின்னர் முழு நேர பணியாளராக ஆனதும் பணிப்பதிவேடு துவங்கிய பின்னர் அதில் தங்கள் துறைதேர்வு முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம். 


                   குறிப்பு:   தாங்கள் பணிபுரியும் பள்ளி முகவரியை கொண்டே தேர்வு எழுத வேண்டும். தங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தின்  தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுத வேண்டும். மற்ற மாவட்டத்தில் தேர்வு எழுத வேண்டாம். இது எவ்விதத்திலும் பணி நியமன வாய்ப்பிற்கு பயன்படாது.